Home விவசாயம்

உங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில்.. காய்கறிச் செடி, பழக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்க ஆசையா?

9

சென்னை: உங்கள் வீட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக பழக்கன்றுகளையும், காய்கறிச் செடிகளையும் வழங்க ஆசையா?, அப்ப இது உங்களுக்கான பதிவு தான்.

தமிழ்நாடு முழுவதும் 78 இடங்களில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் அன்பளிப்பு செடிகளை மிகமிக குறைந்து விலைக்கு வாங்கலாம்.

இனத்தூய்மைமற்றும் தரமான நடவு செடிகளை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விநியோகம் செய்வதே அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது. இப்பண்ணைகள் விவசாயிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், நவீன நீர் பாசன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய “மாதிரி செயல்விளக்க பண்ணைகளாக” திகழ்கிறது.

சிறப்பு திட்டங்கள்:

* அரசு தோட்டக்கலை பண்ணைகளில் காய்கறி விதைகள் உற்பத்தி.

* பண்ணை சுற்றுலா திட்டம்.

* சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் அன்பளிப்பு செடிகள் வழங்குதல்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதனிடும் தொழிற்கூடங்கள்.

* வாசனைப் பொருட்கள் தயாரிப்பதற்கான செயல் விளக்கமையம்.

* சாக்லேட் தயாரிப்பு மற்றும் செயல்விளக்கக் கூடம்.

* உயிரி கட்டுப்பாட்டுகாரணிகள் உற்பத்திமையம்.

* விதைப்பந்துகள் விநியோகம்.

* தோட்டக்கலை சுற்றுச்சூழல் சுற்றுலா.

* நில எழிலூட்டும் பிரிவு.